மதுரை மாவட்டம் அரசப்பட்டி கிராமத்தில் மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால், இறந்தவரின் உடலை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் விளை நிலங்கள் மற்றும் முட்புதர்கள் வழியாக கழுத்தளவு நீரில் கண்மாயை கடந்து சுமந்து செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது. மழைக் காலங்களில் கண்மாயில் அதிகளவு தண்ணீர் நிரம்பி விடுவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக கூறும் கிராம மக்கள், பல்வேறு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் 40 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த பாண்டியம்மாள் எனும் மூதாட்டியின் உடலை கழுத்தளவு நீரில் சுமந்து சென்று அடக்கம் செய்த இளைஞர்கள், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.