தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே முறையான பொதுக்கழிப்பிடம் கட்டி தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்மாபட்டி கிராமத்தில் கழிப்பறை வசதியின்றி தவித்து வரும் மக்கள், சாலைகளில் இயற்கை உபாதை கழிக்க வேண்டிய அவலம் நிலவி வருகிறது. மேலும் பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தும், அதற்காக இடம் இல்லாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள மயானத்தில் இருந்த மோட்டார்கள் மற்றும் மின்சாதன பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.