கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்த இரு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருர் மற்றும் எடையூர் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.