விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பூட்டியிருந்த அரசு நூற்பாலையில் இருந்து இயந்திரங்களை திருடிய கும்பல் மற்றும் வழிப்பறி செய்த கும்பலின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூட்டுறவும் நூற்பாலையின்இயந்திரங்கள் மற்றும் இரும்புகளை N.சண்முகசுந்தரபுரம் பகுதியை சேர்ந்த கும்பல் திருடிச் சென்றது. மேலும் அதே பகுதியை சேர்ந்த சிலர் கஞ்சா போதையில் தொடர்ந்து மக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்த மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர்.இதையும் படியுங்கள் : கால் தவறி 90 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த முதியவர்... வலை மற்றும் கயிறு கட்டி உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்