உலக நடன தினத்தை முன்னிட்டு கடல் மாசுபாடு, கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து ராமேஸ்வரம் கடலில் 20 அடி ஆழத்தில் சிறுவர் சிறுமியர் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சிறுவர் சிறுமியர்கள் நடன கலையில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும், கல்வி முறைகளில் அதன் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கவும், கடலுக்கு அடியில் நடன நிகழ்ச்சி அரங்கேற்றியதாக தெரிவித்தார். நீருக்கு அடியில் சிறுவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.