மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி, மதுரை காவல் ஆணையரிடம் பல்வேறு அமைப்பினர் புகாரளித்துள்ளனர். அதில், மத மோதலையும், மதக் கலவரத்தையும் ஏற்படுத்தும் வகையில் பேசிய ஆதீனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்துக்களும், முஸ்லீம்களும் மாமான் - மச்சான்களாக பழகிவரும் சூழலில், தன்னை இஸ்லாமியர்கள் கொல்ல முயன்றதாக பொய்யாக குற்றம் சாட்டிய மதுரை ஆதீனம், முதலில் தமிழ்நாட்டு மக்களிடமும், இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.