திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பங்குனி மாத பௌர்ணமியையொட்டி வருவாய் 4 கோடியே 23 ஆயிரத்து 757 ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது. திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் 120 நபர்கள் ஈடுபட்டனர். இதில் 4 கோடியே 23 ஆயிரத்து 757 ரூபாயும், 165 கிராம் தங்கம், 2 கிலோ 740 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.