கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே விவசாய தோட்டங்களில் புகுந்த இரண்டு காட்டு யானைகள், பயிர்களை சேதபடுத்தி வருகின்றன. அவைகளை விரைந்து காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.