விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே லிஃப்ட் கேட்ட பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த இருவரை 9 நாட்களுக்குப் பின் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒரு பவுன் தங்க நகை, செல்போன், 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.