குமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் மீண்டும் கடல் சீற்றத்தால் பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் மேலெழும்பின. அபிரக்கடல் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில், இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் படகுகளை கரையிலும், துறைமுகத்திலும் நிறுத்தி வைத்துள்ளனர்.