தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான சக்திவேல் என்பவரை கடந்த 20 ஆம் தேதி சிலர் மயக்க மருத்து ஸ்பிரே அடித்து கடத்த முயன்றனர். அப்போது சக்திவேல் கூச்சலிட்டத்தால் அந்த கும்பல் தப்பி சென்ற நிலையில் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் சொகுசு காரில் நிற்பதாக கிடைத்த தகவலை அடுத்து காருடன் நின்ற 5 பேரை கைது செய்து விசாரித்ததில் சக்திவேலை கடத்தி பணம் பறிக்க முயன்றது அம்பலமானது.