தேர்தல் நேரத்தில் ஜாதி மத ரீதியாக மோதவிட்டு வாக்குகளை அறுவடை செய்வது அரசியல்வாதிகளும், அரசியல் இயக்கங்களும்தான் என திருச்சி எம்.பி. துரைவைகோ சாடினார். தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் அரசு பள்ளியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசிய அவர், அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாகி விடக் கூடாது என்றார்.