மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 67-வது வார்டு கவுன்சிலர் தன்னை பாலியல் ரீதியாக அச்சுறுத்துவதாக பழங்குடியின பெண் புகார் தெரிவித்துள்ளார். கோவில் நிலத்தில் குடிநீர் தொட்டி கட்டியதை காரணம் காட்டி அதனை அகற்ற கூறுவது போல் அடிக்கடி வீட்டிற்கு வரும் கவுன்சிலர் பாலியல் இச்சைக்கு இணங்குமாறு தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாக அந்த பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.