கொடைக்கானலின் கடைக்கோடி கிராமமான வெள்ளகெவிக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான பாதையில் நடந்து சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளகெவி கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், கரடு முரடான பாதை வழியாகவே பயணிக்கும் மக்கள், பொதி சுமக்கும் குதிரைகளை பயன்படுத்தி பொருட்களை கொண்டு செல்கின்றனர். உடல்நலம் பாதிக்கப்படுவோரை டோலி கட்டி சுமந்து செல்லும் அவலநிலையும் நீடித்து வருகிறது. இந்நிலையில், வெள்ளகெவிக்கு சாலை மற்றும் பாலம் அமைக்க 7 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர், சக அதிகாரிகளுடன் கரடு முரடான பாதை வழியாக நடந்து சென்றார்.