மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உயர்மட்ட மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாவதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு மாற்று வழி ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.