திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையம் அருகே 25 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து அரிஸ்டோ பாலம் வரை சிறிய உணவகம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், அங்குள்ள கடைகளை இடித்து அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.