தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தொடர் விடுமுறை உள்ளதால் ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்தனர். தொடர்ந்து அண்ணா பூங்கா, லேடிஸ் சீட், சேர்வராயன் மலை, மான் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும், நீண்ட நேரம் காத்திருந்து படகு இல்லம் பகுதியில் இயற்கை அழகை ரசித்தவாறு படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.