ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள், அரசு தாவரவியல் பூங்காவில் சாரல் மழையிலும் குடைகளை பிடித்தபடி மலர்களை கண்டு களித்தனர். மேலும் சிலர் மழையில் நனைந்தவாறு, நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். உதகையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், சனிக்கிழமை திடீரென சாரல் மழை பெய்தது.