செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே காற்றில் சரிந்து விழுந்த ஓலை குடிசைக்குள் சிக்கிய இளைஞர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டனர். மண்ணிவாக்கம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் திடீரென மழை அதிகரித்ததால் அருகிலிருந்த ஓலை குடிசையின் கீழ் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து பலத்த காற்று வீசப்பட்டதால் ஓலை குடிசை தூக்கி வீசப்பட்டு அதன் கீழ் நின்ற இளைஞர்கள் மீது சரிந்து விழுந்தது.