சேலம் அருகே பண மோசடியில் ஈடுபட்ட பெண், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுப்பதாக ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சின்னதிருப்பதியை சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் நிறுவன மேலாளர் பிரபாகரனிடம், சொந்த நிறுவனம் தொடங்க 5 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாகக் கூறி, ஜெயலட்சுமி என்பவர் 30 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு மோசடி செய்தார்.