மதுரையில் விஜயை பார்க்க முயன்ற தொண்டனின் தலையில் பாதுகாவலர் துப்பாக்கி வைத்த சம்பவம் பூதாகரமான நிலையில், அது எதார்த்தமாக நடந்தது என்றும், அதில் தவறு கிடையாது என்றும் அந்த தொண்டர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விஜயின் பாதுகாப்பிற்காக தன்னை சுட்டுக் கொன்றாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்றார்.