தமிழகத்தில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 4 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, எஸ்.பி. சந்தோஷ் ஹடிமனி, திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராகவும், திருவல்லிக்கேணி துணை ஆணையராக இருந்த செல்வநாகரத்தினம், பரங்கிமலை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பரங்கிமலை துணை ஆணையராக இருந்த சுதாகர், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாகவும், திருவண்ணாமலை எஸ்.பி.யாக இருந்த பிரபாகர், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.