திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் மின்சார வசதி இல்லாததால் குழந்தைகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மாடப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கன்வாடி மையத்தில் மின்சார வசதி இல்லாததோடு, கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பெற்றோர், விரைந்து சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.