ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக பெண் நிர்வாகியின் கணவரை, மதுபோதையில் இருந்த இளைஞர் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரக்கோணம் ஊராட்சி திமுக ஒன்றிய குழு உறுப்பினராக உள்ள அஸ்வினியின் கணவர் சுதாகர், அம்மனூர் சிந்து திரையரங்கம் எதிரே உள்ள தனது வீட்டின் வாயிலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது பட்டாக்கத்தியுடன் அங்கு சென்ற இளைஞர் அவினேஷ்குமார், சுதாகரை கொடூரமாக வெட்டியுள்ளார். மேலும் தாயை பற்றி இழிவாக பேசிய ஆத்திரத்தில் தாக்கியதாக கூறி போலீசில் சரண் அடைந்துள்ளார்.