திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் டாஸ்மாக் கடையின் முன்பு தீ விபத்து ஏற்பட்ட நிலையில், டாஸ்மாக் கடையில் இருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம் இன்றி தப்பின. டாஸ்மாக் கடைக்கு முன்பு கொட்டப்பட்டிருந்த குப்பை கழிவுகள் திடீரென தீப்பிடித்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த புல்டோசர் வாகனம் எரிந்து சேதமானது.