கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நெடுஞ்சாலைத்துறையில் உள்ள தண்ணீர் தொட்டியை அகற்ற வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் சங்கத்தினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்மாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டி நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதே இடத்தில் விவசாயிகள் சங்கத்தினர் பெயர் பலகை உள்ளதால் அதனை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் வந்ததால் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.