புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் 21பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதற்கு கண்டனம் தெரிவித்த மீனவர்கள் இதே நிலை நீடித்தால் மீன்பிடித் துறைமுகமே இல்லாமல் போய்விடும் என வேதனை தெரிவித்தனர். எல்லைத்தாண்டி மீன்பிடித்தாக கூறி கடந்த புதன்கிழமை ஜெகதாபட்டினம்,கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 21பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிப்பதும் தொடர்கதையாகி விட்டதாக வேதனை தெரிவிக்கும் மீனவர்கள், மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.