கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆற்றில் குளித்தபோது தாயின் கண்முன்னே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மகனை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். மோசட்டை கிராத்தை சேர்ந்த சரஸ்வதி, தனது இரு மகன்களுடன் வெள்ளாற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, ஆற்றில் உள்ள பள்ளத்தில் சிக்கி இரு மகன்களும் நீரில் மூழ்கிய நிலையில், இளைய மகனை அவர் மீட்டுள்ளார். மூத்த மகன் அவரது கண் முன்னே ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தெரிகிறது.