சென்னை பெரும்பாக்கத்தில் தகாத உறவில் இருந்த தாயின் கையை வெட்டிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். கண்ணகி நகரை சேர்ந்த வசந்தகுமாரி என்பவருக்கு கீழ் வீட்டை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடமாக கணவன் முருகன் மற்றும் மூன்று மகன்களை விட்டு பிரிந்து பெரும்பாகத்தில் ஸ்டீபன் ராஜ் உடன் வசந்தகுமாரி வசித்து வந்தார். இதனிடையே முருகன் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தந்தையின் மரணத்திற்கு தாய் தான் காரணம் என மூத்த மகன் ஆகாஷ் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தாய் வசிக்கும் வீட்டிற்கு சென்ற ஆகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கையை வெட்டிவிட்டு தப்பிசென்றார்.