கர்நாடக மாநிலத்தில் 60 வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து கால் உடைந்த நிலையில் போலீஸாரிடம் சிக்கினார். வ.ஊ.சி. நகர் பகுதியில் இரு வீடுகளில் நடைபெற்ற கொள்ளை வழக்கில், அபு பக்கர் சித்திக் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். இந்தநிலையில், இஎஸ்ஐ என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் பிடிக்க முயன்றனர். அப்போது, தப்பி ஓடிய போது தவறி கீழே விழுந்ததில் இடது கால் முறிந்த நிலையில் அவரை கைது செய்து, 16 சவரன்தங்கநகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.