தஞ்சையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு, அந்தந்த பேருந்தின் டயர்களுக்கு அடியில் வைத்து நொறுக்கப்பட்டன. ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்ததை அடுத்து, புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். முதல் முறை என்பதால் எச்சரித்து விடுவதாகவும் திங்கள்கிழமையில் இருந்து ஏர் ஹார்ன் இருக்கும் பேருந்துகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.