திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசாரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குருமன்ஸ் காலனியை சேர்ந்த ராஜி என்பவரது பூர்வீக இடத்தில் அவரது மகன் முரளி வீடு கட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது சகோதரி ராஜலட்சுமி, தாயாருக்கு திதி கொடுக்க வந்த போது, இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது ராஜலட்சுமி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்த நிலையில், அங்கு வந்த காவலர், முரளியின் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து உள்ளே சென்றார். மேலும் சம்பவ இடத்துக்கு சென்ற ஜோலார்பேட்டை போலீசாருடன் முரளியின் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.