திருச்சி அருகே சிறுவனை மது அருந்த வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதூர் உத்தமனூரை சேர்ந்த அஜித்குமார் அந்த வீடியோவை பதிவிட்டதும், அவரது சகோதரர் பிரசாத் பொங்கலன்று நண்பர்களுடன் மது அருந்திய போது தனது மகனுக்கும் மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததும், அதனை செல்போனில் வீடியோ எடுத்து அஜித்குமாருக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து அஜித்குமார் கைது செய்யப்பட்டார்.