மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வாகன தணிக்கையின் போது மதுபோதையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை தாக்கி, அபராதம் விதிக்கும் கருவியையும் சேதப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் அகணி பகுதியை சேர்ந்த மங்களதாசன் என்பதும், குழந்தைகள் நலத்துறையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.