கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே ஊராட்சி செலவு குறித்து கணக்கு கேட்ட வழக்கறிஞரை கல்லால் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீர்ப்பனந்தல் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பழனி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் மணிகண்டன் புகார் அளித்ததால் விரோதம் ஏற்பட்டது.