வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தூர்கேட் பகுதியில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட பயணியர் நிழற்குடையின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 11 லட்சம் ரூபாய் செலவில் பயணியர் நிழற்குடை கட்டி திறக்கப்பட்டு இரு நாட்களில் சேதம் அடைந்தது. இதனையடுத்து இரவோடு இரவாக மேற்கூரையை ஒப்பந்ததார் சீரமைத்துள்ளார்.