மதுரை பாறைப்பட்டி முதல் S.அய்யம்பட்டி கண்மாய் வரை உள்ள 58 கால்வாயின், தாய் வாய்க்காலை தனி நபர் ஒருவர் தடுத்து வைத்துள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் ராணுவ வீரர் புகார் தெரிவித்தார். மாவட்ட குறைதீர் கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் முன்வைத்த புகாருக்கு பதிலளித்த அதிகாரிகள், சந்தனமரத்தை பாதுகாப்பதாக கூறி ஒருவர் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதிகாரிகள் கேட்க சென்றால் சுமார் 20 பெண்கள் வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த மாவட்ட ஆட்சியர் 50 அம்மாக்கள் வந்தாலும், ஆக்கிரமிப்பை ஒரே நாளில் அகற்ற உத்தவிட்டார்.