அரசாணையை பின்பற்றி 24 மணி நேரமும் டீக்கடை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, இரவு 11 மணிக்குள் கடையை மூட சொல்லி போலீஸார் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல என கூறியுள்ளது. இரவு 11 மணிக்கு மேல் டீக்கடைகள், உணவகங்கள் செயல்படக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டதால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, பஷீர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.