மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் கழிவுகளை அப்புறப்படுத்த தாமதமானதால் ஒப்பந்த ஊழியரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் கடைக்கு முன் இருந்த குப்பைகளை அகற்ற தாம்படுத்தியதாக கூறி கடை உரிமையாளர் இசக்கி மற்றும் மேலும் 3 பேர் சேர்ந்து அழகர் என்ற பணியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அழகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மாநகராட்சி அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் இசக்கி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.