வேலூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி மீது பெண் வீட்டார் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவரும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஜனனிபிரியா ஆகிய இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதம் இல்லாமல் கடந்த 17-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேலும் இருவரும் பாதுகாப்பு கேட்டு, எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பெண் வீட்டார் காதல் ஜோடியை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.