தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தீப்பெட்டி கேட்ட இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சைமணி அதே பகுதியை சேர்ந்த தமயந்திரன் என்பவரிடம் தீப்பெட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தமயந்திரன் தனது நண்பர்களோடு பிச்சைமணி வீட்டிற்கு சென்று அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.