திருப்பூர் போயம்பாளையம் பிரிவு பகுதியில் மருமகளை பின் தொடர்ந்து சென்று கேலி செய்த முத்து என்ற நபரை நடுரோட்டில் தரதரவென இழுத்துச் சென்று பெண்ணின் மாமனார் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. போயம்பாளையம் பிரிவு ,குருவாயூரப்பன் நகர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் ஆத்திரம் அடங்காத மாமனார் அந்த இளைஞரை நடுரோட்டில் தரதரவென்று இழுத்து சென்ற மீண்டும் தாக்க தொடங்கினார். தகவல் அறிந்தது வந்த போலீசார் காயத்துடன் கிடந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.