திருவள்ளூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஆந்திராவில் சிமெண்ட் மூட்டைகள் இறக்கிவிட்டு திரும்பிய லாரி, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவானூர் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் உள்ள கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது