தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் புனித அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான "அன்னையின் அலங்கார தேர்பவனி" வெகு விமரிசையாக நடைபெற்றது. மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதாவின் சொரூபம் வைத்து தேர் பவனி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேர் பவனியில் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.