திருச்சி மாவட்டம் வெங்கங்குடி பகுதியில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் பழைமையான மூன்று ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. சுரேஷ் என்பவரது வீட்டிற்கு அருகில் தோண்டப்பட குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள், வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.