நாகை மாவட்டம் திருமருகலில் சிறுவன் ஓட்டி சென்ற கார் வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்தவரின் மேல் ஏறி இறங்கியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமருகல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி நாகசுந்தரம் என்பவர், தனது வீட்டு வாசலில் படுத்து உறங்கி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக 16 வயது சிறுவன் யாழ் அரசன் ஓட்டி சென்ற கார், நாகசுந்தரம் மீது ஏறி இறங்கியது.