வேலூரில் பாலாற்றில் குளிக்க சென்ற 8 வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோபி கானா குடியிருப்பில் வசித்து வந்த அஸ்வின் சக நண்பர்களுடன் வீட்டின் அருகில் உள்ள பாலாற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் அஸ்வின் மூழ்கி உயிரிழந்ததாக தெரிகிறது.