தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. போடிநாயக்கனூர் முத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ராம்குமார் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டு பொருட்களை வாங்கிவந்தார். அப்போது வீட்டின் முன்பாக சாவியை எடுக்காமலேயே பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் இருசக்கர வாகனத்தை நைசாக திருடி சென்றார்.