புதுச்சேரி வில்லியனூர் லூர்து மாதா திருத்தலத்தின் 148ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தலத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில், சென்னை முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றி பெரு விழாவை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வில்லியனூர் லூர்து மாதாவை வழிபட்டு சென்றனர். இத்திருவிழா திருப்பலியில் பங்கேற்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் வருகை தந்துள்ளனர்.