நீலகிரி மாவட்டம் உதகையில் மலர் கண்காட்சிக்காக பூத்தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் பல வண்ண மலர்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. வரும் 16 ஆம் தேதி 127 ஆவது மலர்கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாக பலவண்ண மலர்கள் பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தொட்டிகளில் பூத்து குலுங்கும் 75 இனங்களை சேர்ந்த 388 வகையான பூ ரகங்களால் தாவரவியல் பூங்கா வண்ணமயமாக ஜொலித்து வருகிறது.